யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய சிறு போராட்டம் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது.
சனிக்கிழமை (6) பிற்பகல் ஆரம்பமான குறித்த சிறு போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (7) தினமும் நடைபெற உள்ளது.
இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஒரு சிலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...