Main Menu

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 பிரதான வீதியின் உளங்குளம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து புதன்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பகுதியில் இருந்து மரதன்கடவல பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

24 வயதுடைய மரதன்கடவல பகுதியை வசிப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்சமயம் மரதன்கடவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...
0Shares