Main Menu

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும்

கடந்த அரசாங்கத்தின்போது அமைச்சர்கள் உட்பட அரச அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள், விசாரணைகளின் பின்னர் மீண்டும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய 59 அரச நிறுவனங்களுக்குக் குறித்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின்போது, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பயன்படுத்திய பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலும் இலங்கை மன்றக்கல்லூரிக்கு அருகிலும், காலி முகத்திடல் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வி8 ரக சொகுசு வாகனம், ஜிப் ரக வாகனம், ரேஞ் றோவர், மொண்டிரோ உள்ளிட்ட சொகுசு ரக வாகனங்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
பகிரவும்...
0Shares