மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் திருத்தம் நாட்டின் சட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் – சஜித் பிரேமதாச

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய சஜித்பிரேமதாச, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் திருத்தம் நாட்டின் சட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்று வலியுறுத்தினார். “அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை நான் முன்னரே பேசியுள்ளேன். அதை நான் எப்போதும் வொல்வேன். குறிப்பாக நாட்டின் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 13வது திருத்தம் சட்டப் புத்தகங்களில் இல்லையா? சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தீங்கானது அல்ல. அது உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. மற்றவர்கள் இதைக் கூற பயப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நான் அப்படி இல்லை. நான் சரியானதை அப்படியே சொல்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
பகிரவும்...