Main Menu

மலேசியாவில் 9 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த இலங்கை இளைஞர் உயிரிழப்பு

மலேசியாவின் – கோலாலம்பூரில் உள்ள தொடர்குமாடிக் குடியிருப்பொன்றின், ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (7) காலை இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து காலை 8.40 அளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டபோது, கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்த 26 வயதுடைய இலங்கையர் ஒருவர், குறித்த தொடர்மாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் உள்ள நீச்சல் தடாகத்துககு அருகில் உடலமாக கிடந்ததாக என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை கோலாலம்பூர் மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தடயங்கள் எதுவும் குறித்த குடியிருப்பில் கண்டறியப்படவில்லை என்றும் மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares