Main Menu

மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில், தாய் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க தாயே இவ்வாறு உயிரிழந்தார்.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த குறித்த சந்தேகநபர்,

மனநலம் பாதிக்கப்பட்ட 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த நபரை கைது செய்த வாழைச்சேனை பொலிஸார்,

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பகிரவும்...