“பெக்கோ சமனின்” மனைவிக்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷானிகா லக்ஷானியை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இன்று வெள்ளிக்கிழமை (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 54(1) இன் கீழ் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க போதுமான ஆதாரங்களை அரச தரப்பு சமர்ப்பிக்காததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்lதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...