Main Menu

புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலையில்,  திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்தகாங்கிரஸ் கட்சியினர், ‘வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் அங்கு திரளக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென மோதலாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.