Main Menu

பாடசாலை மாணவி மாயம்

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 3 ஆம் திகதி முதல் குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதுடன், காணாமல் போன சிறுமி சுமார் 5 அடி 2 அங்குலம் உயரம் மெலிந்த சாதாரண தோற்றம் கொண்டவர்.

அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற நீளமான ஸ்லீவ்ஸ் அணிந்திருந்தார், மற்றும் அவரது இடது கையில் முழங்கைக்கு அருகில் ஒரு சிறிய வெட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மாணவியின் தாயார் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ் கண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எட்டம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718591528

எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையம் – 0552295466

பகிரவும்...