Main Menu

பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்​தி​யா​வில் கிறிஸ்​தவர்​கள் மீதான தாக்​குதல் அதி​கரித்​துள்​ள​தாக விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​தார். வட மாநிலங்​களில் கிறிஸ்​தவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல்​களை கண்​டித்து விசிக சார்​பில் சென்னை சைதாப்​பேட்​டை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

விசிக தலை​வர் திருமாவளவன் தலை​மை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் விசிக துணை பொதுச்​செய​லா​ளர் வன்​னியரசு, விசிக எம்​எல்​ஏக்​கள் ஆளூர் ஷாந​வாஸ், எஸ்​.எஸ்​.​பாலாஜி, சிந்​தனைச் செல்​வன் ஆகியோர் பங்​கேற்​றனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திருமாவளவன் பேசி​ய​தாவது:

கிறிஸ்​தவர்​களுக்கு மீதான தாக்​குதல் புதிதல்ல, 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்​பேற்​றது முதல் அரசுகளின் ஆதர​வோடு அதை அவர்​கள் செய்து வரு​கின்​றனர். அப்​போது சிஎஸ்ஐ, இசிஐ போன்ற பெரிய அமைப்​பு​கள் பெரிதும் பாதிக்​கப்​பட​வில்​லை.

ஆனால் சிறிய தேவால​யங்​கள் சிறிய அமைப்​பு​களைச் சார்ந்​தவர்​களை மதவெறி சார்ந்த அமைப்​பு​கள் தாக்கி வரு​கின்​றன. இது​போன்ற பிரச்​சினை​களை உரு​வாக்​கவே சங்​பரி​வார் அமைப்​பு​கள் தொடர்ந்து செயல்​பட்டு வரு​கின்​றன.

இன்​னும் 3 மாதங்​களில் தேர்​தல் வரவுள்​ளது. ஆனால் இது​வரை நம்​மிடம் அதற்​கான எந்த செயல்​திட்​ட​மும் இல்​லை. சங்​பரி​வார் அமைப்​பு​கள் இது​போன்ற பிரச்​சினை​களை உரு​வாக்க அடுத்த 25 ஆண்​டு​களுக்கு செயல்​திட்​டம் வைத்​துள்​ளனர்.

இந்​துக்​களை ஓரணி​யில் திரட்ட வேண்​டும் என்ற நோக்​கத்​தைச் செயல்​படுத்த வேண்​டும் என்​ப​தற்​காக இவற்றை அவர்​கள் செய்​கின்​றனர். இந்​துக்​களை ஒன்று திரட்ட வேண்​டும் என்​றால் அதற்​காக ஓர் எதிரியை உரு​வாக்க வேண்​டும்.

எனவே​தான் கிறிஸ்​தவர்​கள், இஸ்​லாமியர்​களை எதிரி​களாக சித்​திரிக்​கின்​றனர். ஆர்​எஸ்​எஸ் கும்​பல் மொழி வழி தேசி​ய​வாதத்​துடன் உடன்பட மாட்​டார்​கள். ஆனால் தூண்​டி​விடும் வேலையை செய்​வார்​கள், தமிழ் தேசி​யம் மலர பாஜக ஒரு​போதும் இடம் கொடுக்​காது. தமிழ் தேசி​யத்​தின் முதல் எதிரியே மதவாத தேசி​யம் பேசுபவர்​கள்​தான்​. இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...