நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை – பிரித்தானியா கடும் கட்டுப்பாடு
பிரித்தானியாவில் ஏதிலிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த விடயத்தை அந்நாட்டு அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் அதன் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்று விட்டதை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இனிமேல் ஏதிலி தஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட ஒருவருக்கும் அவரது சொந்த நாடு பாதுகாப்பானது எனக்கருதப்படும் போது, அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனடிப்படையில், ஏதிலிகளுக்கான தஞ்சங்களை இனிமேல் தற்காலிகமாகவே வழங்க முடிவு எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இனி மேல் ஏதிலிகள் நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை ஆகிய நிலைகளை எட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பகிரவும்...
