Main Menu

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு கொரோனா மரணங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று (சனிக்கிழமை) 08 பேர் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் 672,283 பேர் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...