தமிழ் மக்கள் கூட்டணியினர் யாழில் பிரசாரம்

தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (26) யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் நகர் பகுதியில் தேர்தலுக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டது.
இப்பிரசாரத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் முதலான வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ். நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டோம். பிரசுரங்களை விநியோகிக்கும்போது, மக்களின் கருத்துக்களை கேட்கும்போது, அனைவரும் மாற்றம் ஒன்றினையே விரும்புவதாக தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துக்களின்படி, பிரகாசமான ஒரு வெற்றியை நோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகிறது.
பகிரவும்...