Main Menu

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி திருகோணமலையிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருகோணமலையில் பிரார்த்தனை வாரம் ஆரம்பபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த பிரார்த்தனை வாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரார்த்தனையில் திருகோணமலைக்கான நிகழ்வு இன்றைய தினம் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின்போது தமிழ் அரசியல் கைதிகள் வருகின்ற பொங்கல் தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, வழிபாட்டு நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இச்செயற்பாடானது தொடர்ச்சியாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

பகிரவும்...