சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார்.
பல்கலை மாணவி விவகாரம், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மதியம் தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார்.
ஆளுநருடனான சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முறையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.