Main Menu

சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின்  தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்திருந்த நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்தொடர்ச்சியாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தற்போது கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து செல்கின்றது.

இந்நிலையில், பல்வேறு நகரங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அடுத்த சில வாரங்களில் விமான சேவைகள் அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...