Main Menu

சட்டத்துக்கு மதிப்பளித்து மஹிந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் ; பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு கடிதம் அனுப்ப போவதில்லை. வெகுவிரைவில் புதிய சட்டம் இயற்றப்படும்.

சட்டத்துக்கு மதிப்பளித்து வீட்டை விட்டு அவர் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து துப்பரவு பணியில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பகிரவும்...