கலைமாமணி விருது வழங்கும் நிகழ்வு- தமிழ் திரையுலகினரின் பெயர்களும் உள்ளடக்கம்

2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழ் திரையுலகின் பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதில், 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் திரைத்துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டுக்கான விருதுகளில் திரைத் துறையில் நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர், நிகில் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் இசைப்பிரிவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை, சிறந்த கலை மன்றமாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றமும், சிறந்த நாடக குழுவமாக மதுரை எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றமும் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரை நடிகர் பி.கே.கமலேஷ், நடிகை ஜெயா வி.சி. குகநாதன், மெட்டி ஒலி காயத்ரி ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளதுடன் குறித்த விருது வழங்கும் நிகழ்வு அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பகிரவும்...