Main Menu

உந்துருளியுடன் மோதிய அதி சொகுசு பேருந்து – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில், மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் இன்று புதன்கிழமை (08) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல் நிலைய, போக்குவரத்து காவல்துறைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் நிஸ்ஸங்க தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares