Main Menu

இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?- கவர்னர் தமிழிசை வேதனை

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இணையற்ற இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரத பிரதமரை, அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதில் இருந்து வெளிவந்த உணர்வுகளை வெளியிட்டதற்காக இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

பகிரவும்...