Main Menu

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிக் காரியாலயத்தில் தற்போது இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

பகிரவும்...
0Shares