இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இன்று (04) பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
இந்தி மொழியைத் திணிக்கும் வெறியில் பாரதிய ஜனதாக் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, “உச்சரிக்க முடியாத” இந்தி பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களில் வெறுமனே மொழிபெயர்த்து வருவதாகவும், இந்தி திணிப்பு மீதான “வெறிக்கு” எதிராக பாஜகவை எச்சரிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
