Main Menu

ஆளுநரை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளருமான காங்கை குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கோமதி பாஸ்கரன், விளையாட்டுத்துறை மாநிலத் துணைத்தலைவர் பூவை ராஜா, திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் தனசெழியன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் வீராபுரம் தாஸ், எல்லாபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சிவசங்கர், ஆசிர்வாதம், திவாகர், சுயம் பிரகாஷ், குருதேவ், பங்காரு நாயுடு, தினேஷ், நரேந்திரன், யுகேந்திரன், பச்சையப்பாஸ் பிரகாஷ், சுரேஷ், அருண், பாலாஜி, சீனிவாசன், வினோத்குமார், யோகேஷ் மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...