Main Menu

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைகள் எந்த விதத்திலும் குறைக்கப் படவில்லை – குஷானி ரோஹணதீர

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் முன்னரை போன்றே வழங்கப்படும் எனவும், இதுவரையில் குறித்த வரப்பிரசாதங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 35 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீள ஒப்படைக்கப்பட்ட 25 முதல் 30 இல்லங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.

முன்னுரிமைக்கு ஏற்ப அந்த இல்லங்கள் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

மொத்தமுள்ள 108 இல்லங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்திலிருந்து 40 கிலோமீற்றர்களுக்கு அப்பால் பதிவிடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக விண்ணப்பிக்க முடியுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares