இலங்கை
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான தரவுகள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால்மேலும் படிக்க...
மேர்வின் சில்வா மற்றும் மூவருக்கு பிணை

கிரிபத்கொடையில் உள்ள அரச நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூவருக்கு பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. இது தொடர்பானமேலும் படிக்க...
கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு – பெண் பரிதாப மரணம்

குருவிட்ட பொலிஸ் பிரிவில் தெவிபஹல, தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து நகையைப் பறித்து சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 26மேலும் படிக்க...
கந்தானை துப்பாக்கிச் சூடு – மறைந்த அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கு காயம்

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹாரவும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானையில் இன்று (3) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...
14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை 1992, 1994, 1997 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்மேலும் படிக்க...
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்! அறிவித்த எலோன் மஸ்க்

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தைமேலும் படிக்க...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. “உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரசமேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். கொழும்பில் நேற்று அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகமேலும் படிக்க...
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா -இலட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று புதன்கிழமை (02) இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோமேலும் படிக்க...
அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை? – இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை – நீதிமன்ற ஆயம்
இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் இந்தமேலும் படிக்க...
மலேசியாவிற்கு வீசா இல்லாத பயணம்

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது. மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவிடம், மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு சபையின்மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழி: வழக்கு இடம்பெறுவதால் மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயம் தொடர்பான வழக்கொன்று கடந்த ஜூன் மாதம்மேலும் படிக்க...
செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் – சுமந்திரன்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அப்போதையமேலும் படிக்க...
கதிர்காமத்திற்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கியது

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிமேலும் படிக்க...
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, வருடத்தில் கடந்தமேலும் படிக்க...
இன்று சர்வதேச சமூக வலைத்தள தினமாகும்
தொடர்பாடலும் தகவல் பரிமாற்றத்துக்குமான ஒரு பெரிய புரட்சி சமூக வலைத்தளங்களால் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 அன்று சமூக வலைத்தள தினம் (Social Media Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் அதன் பயன்களை நினைவூட்டும்மேலும் படிக்க...
பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல்

யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (28.06.25) முட்கம்பி வேலிகள்மேலும் படிக்க...
கெஹெலிய மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 240,000 ரூபாய்களை அவர் அமைச்சிலிருந்து பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையூட்டல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- …
- 436
- மேலும் படிக்க

