இலங்கை
யாழ். விஜயத்தில் ஜனாதிபதி செம்மணியை பார்வையிடலாம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர்மேலும் படிக்க...
ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத்மேலும் படிக்க...
வைத்தியர் ருக்ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இதுமேலும் படிக்க...
மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க் கட்சிகள்

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், இன்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின்போது எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்றைய கூட்டம்மேலும் படிக்க...
முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழக்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த யூலை மாதம் (07) பிணை வழக்கப்பட்டும் தற்போதுமேலும் படிக்க...
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்புமேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீது வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 மே 9 அன்றுமேலும் படிக்க...
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டன. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து, அராலி சந்தி, மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில்மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம் – பிரதிப் பணிப்பாளர் தகவல்

அரசியல் காரணங்களின் பிரகாரம் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் விரட்டுங்கள் – வீடமைப்பு பிரதி அமைச்சர்

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் தங்களை விரட்டுமாறு வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம்மேலும் படிக்க...
ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும்,மேலும் படிக்க...
ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம்

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இன்று (26) நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. எவ்வாறாயினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்மேலும் படிக்க...
மலையக மக்களை முழுமையாக இலங்கை பிரஜைகளாக அங்கீகரிப்பதற்-கான நடவடிக்கைகள் இனியும் தாமதப் படுத்தப்பட மாட்டாது – அரசாங்கம் உறுதி
மலையக மக்களை ‘மலையக தமிழ் மக்கள்’ என அரசியல் ரீதியாக அங்கீகரிப்பது, அந்த சமூகத்திற்கு ஒரு மரியாதை, அங்கீகாரம் மற்றும் பெருமையைக் கொடுக்கும் செயலாகும். அதற்கான நடவடிக்கைகள் இனியும் தாமதப்படுத்தப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம்மேலும் படிக்க...
சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஆட்சி சுயாதீன நீதித்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். செவ்வாய்கிழமை (26) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணைமேலும் படிக்க...
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி

எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில்மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில் செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்தமேலும் படிக்க...
ஜூம் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்தார் ரணில்

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கில் இணைந்துள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், குறிப்பாக கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும்மேலும் படிக்க...
2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும்! – ஜனாதிபதி

2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- …
- 436
- மேலும் படிக்க
