இலங்கை
அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேலும் படிக்க...
இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ கடந்தது

இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ கடந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்தமேலும் படிக்க...
வேலன் சுவாமி வைத்தியசாலையில் அனுமதி

தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக ஈடுபட்டு வேலன் சுவாமிமேலும் படிக்க...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட 30 பேரை மீள அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு

இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பவர்களுடன் அமெரிக்க இராஜதந்திரமேலும் படிக்க...
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி

வவுனியா,செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குழுவொன்றினால் அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைமேலும் படிக்க...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர்மேலும் படிக்க...
யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்குமேலும் படிக்க...
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நேற்றும்மேலும் படிக்க...
மண்சரிவால் பாதிக்கப் படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு

அண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களைப் பாதுகாக்கவும், சேதமடைந்த பாடசாலை அமைப்பை மீட்டெடுக்கவும் அரசாங்கம்மேலும் படிக்க...
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு தளராது, உறுதியான உறுதியுடனும் ஒரே நோக்கத்துடனும் நம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நாடாக நாம் முன்னேற முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கமேலும் படிக்க...
தையிட்டியில் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரைக்காகமேலும் படிக்க...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்-கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது. மக்களை வெளியேற அறிவுறுத்தும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேசமேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கானமேலும் படிக்க...
பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு தியாகராஜநகரில் அமைந்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்தமேலும் படிக்க...
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்

டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள்மேலும் படிக்க...
முன் மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் – பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார் . வரைவு சட்டமூலம் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, தற்போது நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில்மேலும் படிக்க...
சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன் சேனல் வழியாக பயணி வெளியேற முயன்றதை அடுத்து இன்று காலைமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

‘டித்வா’ சூறாவளியை அடுத்து டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 01 முதல் 14 ஆம் திகதிமேலும் படிக்க...
கஜேந்திரகுமார் தலைமையிலான குழு சீமானுடன் சந்திப்பு

தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடினர். தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழகத்தின் பிரதிநிதிகளை சந்திக்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 436
- மேலும் படிக்க

