Day: December 5, 2025
ஆடம்பரங்களை தவிர்த்து கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள் ; யாழ். மறை மாவட்ட குரு முதல்வர்

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் இறை மக்களை கேட்டுள்ளார். பொருத்தமற்ற ஆடம்பரங்களைமேலும் படிக்க...
பேரனர்த்தத்தின் அழிவிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – உலகளாவிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை அழைப்பு

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில்மேலும் படிக்க...
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன், ஒப்பிடும் போது இங்கிலாந்து முழுவதும் உள்ள வைத்தியசாலையில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 50 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவைகளின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,717மேலும் படிக்க...
பேரிடரில் உயிரிழந்த விலங்குகள்: உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்த பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் உயிரிழந்த மீன்களைத் தொடவோ, சேகரிக்கவோ அல்லது உட்கொள்ளவோ கூடாதுமேலும் படிக்க...
‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர். இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர்மேலும் படிக்க...
உக்ரைன் போரை நிறுத்த புதினிடம் வலியுறுத்த வேண்டும்: சீன அதிபரை சந்தித்த பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யாவை சீனா வலியுறுத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சென்றுள்ளார்.மேலும் படிக்க...
“திராவிட இயக்கத்தின் நீட்சியே விஜய்!” – தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் விவரிப்பு

“தவெக தலைவர் விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப் போல் எண்ணி பூரிக்கிறேன். திராவிட இயக்கத்தின் நீட்சியாகத்தான் விஜய்யைப் பார்க்கிறேன்” என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில்மேலும் படிக்க...
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி

இண்டிகோவின் செயல்பாட்டு நெருக்கடி இன்று (05) தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்தது இது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரவலான குழப்பத்தைத் தூண்டியது. ஆயிரக்கணக்கான பயணிகள் உணவு, குடிநீர், காலியான கவுண்டர்கள் மற்றும் தொலைந்த தங்களது பொதிகள் இல்லாமல் சிக்கித்மேலும் படிக்க...
சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் – ஜனாதிபதி

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது எனினும் சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தற்போது ஜனாதிபதி விசேட உரையாற்றி வரும் நிலையில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும்மேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத் தாள்களை எவ்வாறு கையாள்வது

நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர், ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஈரமான நாணயத்தாள்களை பிரிக்கும்போது, பொதுமக்கள் அவற்றை மெதுவாகக் கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரூபாய்மேலும் படிக்க...
டிசம்பர் 9, 10 மற்றும் 11 திகதிகளில் மழை அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்கமேலும் படிக்க...
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் விசேட உரையாற்றி வருகிறார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி நாள் குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதன்போது நாட்டை பாதிக்கும் பேரிடர் நிலைமை குறித்து கட்சி மற்றும்மேலும் படிக்க...
2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 அளவில் நடைபெற்றது, இதில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன. அத்துடன்மேலும் படிக்க...
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு வலம் வந்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்குமேலும் படிக்க...
