Day: October 6, 2025
பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது இராஜினாமாமேலும் படிக்க...
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமற் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
பனிப்புயலில் சிக்கிய 1000 பேர்

திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 பேர் மலையிலிருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமையமேலும் படிக்க...
இந்தியாவில் ஜெய்ப்பூர் வைத்திய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளர்கள் உயிரிழப்பு

இந்தியாவின், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் அரசாங்கத்திற்கு சொந்தமான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின், களஞ்சிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது 11மேலும் படிக்க...
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த ஈரானியர்கள் அறுவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஈரான் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இருமேலும் படிக்க...
யாழ். புன்னாலைக் கட்டுவனில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயம்

பலாலி வீதி புன்னாலைக்கட்டுடன் பகுதியில் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கிமேலும் படிக்க...
இன்று தங்காலை காவல்துறையில் முன்னிலையாக முடியாது – விமல் வீரவன்ச

தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தங்காலை காவல் நிலையத்தில்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை

மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் விநியோகத் தடையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள்மேலும் படிக்க...
சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – 20 பேர் காயம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்தமேலும் படிக்க...
நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிமல்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்மேலும் படிக்க...
மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் எம்.டி.ஆர். அதுல இதனைத் தெரிவித்தார். அதன்படி, மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன்மேலும் படிக்க...