Day: September 23, 2025
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார். ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மனிதகுலத்திற்கு எதிரான மூன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்று அழைக்கப்படும் அவரது காலத்தில் குறைந்தது 76 பேரின் கொலைகளில் அவர்மேலும் படிக்க...
உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா

அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. எச்1பி (H-1B) விசா முறை மூலம் அமெரிக்க நிறுவனம், வெளிநாட்டிலிருந்து சிறப்பு திறமை வாய்ந்த ஊழியரை சட்டபூர்வமாகமேலும் படிக்க...
நீரில் மூழ்கிய கொல்கத்தா நகர்; மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (22) இரவு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து முடங்கியது. மழையின் மத்தியில், ஐந்து பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது துர்காமேலும் படிக்க...
24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம்

கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை

முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவுமேலும் படிக்க...
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “சமாதானத்திற்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரைமேலும் படிக்க...
இலங்கையில் இணையக் குற்றங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு – ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான 6,512 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தங்காலை சம்பவம் – உயிரிழந்த நபரின் இரு மகன்கள் கைது

தங்காலை – சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் அடங்கிய மூன்று லொரிகளுடன் மீட்கப்பட்ட ஒருவரின் இரண்டு மகன்களும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்கல்லே பகுதியில் மூன்று லொரிகளில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 9,888 மில்லியன்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என நம்பப்படும் தங்கம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேமேலும் படிக்க...
மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரானமேலும் படிக்க...