Day: August 21, 2025
டயானா கமகேவுக்கு பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத்மேலும் படிக்க...
காணாமல்போன யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரல்

கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக மாவனெல்லை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்தமேலும் படிக்க...
கழுத்து வெட்டப்பட்டு தாயொருவர் கொடூரமாக கொலை

குருணாகலில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெட்டிபொல, அமுனுகொலே பிரதேசத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் சுமார் 100 அடி கொடிக்கம்பம் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் 02 ஆவது மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு,மேலும் படிக்க...
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல்மேலும் படிக்க...
இலங்கை அகதிகள் கைது விவகாரம்: சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு – பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு வருகை தரும்போது, கைது செய்யப்படும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இயலுமை அரசாங்கத்திடம் காணப்படுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளைமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.மேலும் படிக்க...
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியை சந்தித்தது பேச்சுவார்த்தை

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்டமேலும் படிக்க...
உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்

மனித நேயம், நகைச்சுவை, கருணையால் உலக மக்களை கவர்ந்த“Caught in Providence” நிகழ்ச்சியின் பிரபல நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோ தனது 88 வயதில் காலமானாார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச் செய்தியை குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.மேலும் படிக்க...
நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.மேலும் படிக்க...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – வெளியான முக்கிய அறிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணிமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து – உச்ச நீதிமன்றில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்க கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
