பிரித்தானியா
பிரெக்ஸிற் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி
பிரெக்ஸிற் காலக்கெடுவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தால் ஒப்பந்தமொன்று அங்கீகரிக்கப்பட்டால் காலக்கெடுவிற்குமேலும் படிக்க...
எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதுமேலும் படிக்க...
கொள்கலனில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன் உயிரிழப்புத் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் துப்பறியும்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்
பிரெக்ஸிற் தாமதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைமேலும் படிக்க...
தீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லண்டன் மாநகர முதல்வர் சாதிக் கான் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். லண்டன்மேலும் படிக்க...
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்
அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு!
பிரெக்ஸிற் ஒப்பந்தம் தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு 322 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன்,மேலும் படிக்க...
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதையமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்துமேலும் படிக்க...
‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்
இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் படிக்க...
இறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்
தோமஸ் குக் எனப்படும் 178 வருடங்கள் பழைமையான விடுமுறை சுற்றுலா நிறுவனத்தை பாதுகாப்பதற்கான இறுதி நேர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து அந்த நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பிரித்தானிய பொதுமேலும் படிக்க...
உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு!
உணவகங்களில் இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கான உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்குமுன் உணவோடுமேலும் படிக்க...
டயானாவின் மரணம் குறித்த மற்றுமொரு மர்மம் விலகியது!
இளவரசி டயானாவின் கார் சுரங்கப்பாதையில் உள்ள தூணில் மோதுவதற்கு முன்னர் கார் ஒன்றுடன் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. டயானாவின் கார் மோதுண்ட காரை செலுத்திய ஓட்டுநரான Le Van Thanh இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிமேலும் படிக்க...
ஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி
லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜோ ஸுவின்சன் உறுதியளித்துள்ளார். லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் பிரெக்ஸிற் ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்துமென அக்கட்சியின் தலைவராக முதன்முறையாக கட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்
நான் சட்டத்துக்கு கீழ்ப்படிவேன் ஆனால் ஒக்ரோபர் 31 இல் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமின்றியோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று எட்டப்படா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திடம்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி
கடந்த மூன்று வருடங்களாக பிரெக்ஸிற் குறித்த விவாதம் மட்டுமே இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை எனவும் பிரித்தானியர் ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட கேள்விமேலும் படிக்க...
பிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி
பிரிட்டனில் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்த நினைத்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை எம்பிக்கள் முறியடித்தனர். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதாமேலும் படிக்க...
விமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து!
பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானிகள் வேதனப் பிரச்சினையை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி இன்று விமானங்களைமேலும் படிக்க...
கருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு
வடக்கு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். ஸ்ரோர்மொண்டில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பங்கேற்றிருந்த அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். வடக்கு அயர்லாந்தைப் பொருத்தவரையில் சில வரையறைக்கு உட்பட்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- மேலும் படிக்க