உலகம்
பிரேசிலில் விபத்து- பஸ் கவிழ்ந்து கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி
பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை காண ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் திரண்டனர். போட்டி முடிந்ததும் ஒரு பஸ்சில் ரசிகர்கள் வீடு திரும்பினார்கள். அந்த பஸ்சில் 40 ரசிகர்கள் பயணம் செய்தனர். பஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.மேலும் படிக்க...
மாஸ்கோவில் பாதாள கழிவுநீர் சுரக்கப்பாதையை சுற்றிப்பார்த்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு- 4 பயணிகள் உயிரிழப்பு
மாஸ்கோவில் பல சுற்றுலா வழிகாட்டிகள் தலைநகரின் கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் பயணிகளை அழைத்துச்சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர். அவற்றில் சில சுரங்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இதனால், சுரங்கங்களை சுற்றிப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு குவிகின்றனர். இந்நிலையில், மாஸ்கோவில்மேலும் படிக்க...
ஈக்வடார் நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளர் படுகொலை
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சி யோவும் ஒருவர் ஆவார். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதிபர்மேலும் படிக்க...
பீஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை – கனமழையில் சிக்கி 20 பேர் பலி
சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் படிக்க...
சீனாவில் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு
நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால்மேலும் படிக்க...
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை- பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரைமேலும் படிக்க...
2 வருடங்களுக்கு பிறகு தலிபானுடன் அமெரிக்கா முதல் முறையாக பேச்சுவார்த்தை
2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது. இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. குறிப்பாக மத ரீதியானமேலும் படிக்க...
மியான்மரில் அவசர நிலை நீடிப்பு- தேர்தலை ஒத்தி வைப்பதாக ராணுவம் தகவல்
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் படிக்க...
உக்ரைனை தொடர்ந்து சுவீடனும் நேட்டோவில் இணைய துருக்கி அதிபர் ஆதரவு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதில் இருந்து அண்டை நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷியா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் ரஷியாவுக்கு எதிராகமேலும் படிக்க...
இஸ்ரேலில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்- மக்கள் போராட்டம் தீவிரம்
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்தமேலும் படிக்க...
முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கேள்விகளில் ஒன்றுதான் இது.மேலும் படிக்க...
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகமேலும் படிக்க...
7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் மீண்டும் ஈரான் தூதரகம் இன்று திறப்பு
வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது. தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு நகரமான மஷாத்தில் உள்ளமேலும் படிக்க...
மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டெடுப்பு- போலீஸ் விசாரணை
மேற்கு மெக்சிகோ, ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும்மேலும் படிக்க...
மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் லாரி மீது பேருந்து மோதி விபத்து- 19 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே டூடவாலா- எடியா சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. கேமரூனில் தெற்கு நகரமான எசேகா நோக்கி பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டைமேலும் படிக்க...
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவில் நுழைய தடை
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்தமேலும் படிக்க...
ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை
வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7 உச்சி மாநாட்டில்மேலும் படிக்க...
வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு- பாகிஸ்தான் பிரதமர் அதிரடி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தபோது அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர். ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது. இதையடுத்து இம்ரான்கானின்மேலும் படிக்க...
உக்ரைன் ஜனாதிபதி ஜேர்மனுக்கு விஜயம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனியின் பெர்லின் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக ஜேர்மனியின் ஆதரவைப் பெறுவதே தமது விஜயத்தின் நோக்கம் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, புனித பிரான்சிஸைச் சந்திக்க இத்தாலி சென்றிருந்தமேலும் படிக்க...
சூடான் வன்முறைக்கு மத்தியில் 10 லட்சத்திற்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் சேதம்- ஐ.நா
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியர்களைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 121
- மேலும் படிக்க