உலகம்
பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
பருவநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றம் போன்ற காரணங்களால் புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் 200 நாடுகள் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம் காரணமாக கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறி அமெரிக்கமேலும் படிக்க...
ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம்
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44) மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும்மேலும் படிக்க...
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்
நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் படம் பிடித்து அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்: சீனா வலியுறுத்தல்!
கொடிய கொரோனா வைரஸின் (கொவிட்-19) பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுமாறு, உலக சுகாதார அமைப்பிடம் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவிய வுகான் நகரில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், வுகான்மேலும் படிக்க...
மியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 9ஆம் திகதி தலைநகர் நெய்பிடாவ்வில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்காகினர். இதில் குறித்த பெண்,மேலும் படிக்க...
130 நாடுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளவுக்கூட கிடைக்கவில்லை: ஐ.நா. கவலை!
சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம்!
கிழக்கு ஆசியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அறியப்படும் இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ஜகர்த்தா ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பரவல் சரிவு – உலக சுகாதார அமைப்பு தகவல்
ஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதையும் ஓராண்டுக்கு மேலாக கட்டுக்குள் வைத்திருக்கிறது. லட்சக்கணக்கானமேலும் படிக்க...
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக செவ்வாயில் ஸ்பேஸ் ஹெலிகொப்டரை பறக்கவிடவுள்ள நாசா!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று (வியாழக்கிழமை) செவ்வாயில் தரையிறங்குகிறது. இந்த நிலையில் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, செவ்வாய் கோளில், ஸ்பேஸ் ஹெலிகொப்டரை நாசா பறக்கவிடவுள்ளது. செவ்வாய் கோளில்மேலும் படிக்க...
தடுத்து வைக்கப் பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!
தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது. டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம்மேலும் படிக்க...
பிரான்ஸில் புதிதாக கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் திறப்பு!
பிரான்ஸில் பாபிக்னி நகரில் புதிதாக கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 75 வயதுக்கு மேற்பட்ட ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். பாபிக்னி நகரின் அவென்யூ டிமேலும் படிக்க...
பெருவில் கொவிட்-19 தடுப்பூசி ஊழல்: வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜினாமா!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் இரகசியமாகமேலும் படிக்க...
மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம் உறுதி
மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதில் வெற்றி பெறுபவருக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தினால் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்துமேலும் படிக்க...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.96 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.96 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.மேலும் படிக்க...
எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மது ஆலை கண்டுபிடிப்பு
எகிப்தில் ஆய்வு பணியின்போது அபிடோஸ் நகரில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்று அபிடோஸ். இங்கு மிகப் பெரிய கல்லறைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இந்த நகரில் எகிப்துமேலும் படிக்க...
வடக்கு ஐரோப்பாவில் கடுமையான குளிர் எச்சரிக்கை !
வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இம்மாதம் வெப்பநிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வீடற்றவர்கள் கடும் ஆபத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாட்டின் பெரும்பகுதிக்கு உறைபனி வெப்பநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியதில் இருந்து நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி பதவியேற்பு
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி நேற்று (சனிக்கிழமை) பதவியேற்றார். இத்தாலியின் முக்கிய கட்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரானமேலும் படிக்க...
கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகுக்கு பெரும் சவாலாக அமைந்த கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாகமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக் கொள்ளப் போவதில்லை – புடின்!
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கெமரா முன்பு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிப்பது குறித்த பதிவுகளை நீக்க தீர்மானம்!
மியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கவனிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது, பொலிஸாரினால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- …
- 121
- மேலும் படிக்க