இந்தியா
பறவைக் காய்ச்சலை தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல திட்டம்!
கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலைத் தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து கேரள அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாத்துகளால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளித்தது தமிழக அரசு
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
வேளாண் சட்டங்கள் : இதுவரை 60 விவசாயிகள் உயிரிழப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில் “டெல்லி போராட்டத்தில்மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கைமேலும் படிக்க...
தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் முன்னுரிமை மற்றும் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனத்மேலும் படிக்க...
ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை
அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார். திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர்மேலும் படிக்க...
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை!
தமிழகம் உள்ளடங்களாக இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(சனிக்கிழமை) நடைபெறுகின்றது. முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும்மேலும் படிக்க...
கூகுளின் பிழையை சுட்டிக் காட்டிய தமிழக இளைஞர்
கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்குமேலும் படிக்க...
மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி, விஜய்நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர் படம் பொங்கலையொட்டிமேலும் படிக்க...
ஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி!
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை 2021ம் ஆண்டு கொண்டு வரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,மேலும் படிக்க...
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி கிறித்தவ தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்போர்மேலும் படிக்க...
இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு இன்று(வியாழக்கிழமை) நண்பகல் விமானம் மூலம் சென்னைமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தயாராகும் இந்தியா – ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!
குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு தயாராகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடுப்பூசியைமேலும் படிக்க...
வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாமையே நாங்கள் வீதிகளில் இறங்கக் காரணம் – விவசாயிகள் குற்றச்சாட்டு
நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவசாயிகள் வீதிகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள் வீதிகளில் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் போராடி வருவதால் பலரதுமேலும் படிக்க...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது – எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனவும் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவைக்குமேலும் படிக்க...
கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு
கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்றுமேலும் படிக்க...
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்மேலும் படிக்க...
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்மேலும் படிக்க...
புத்தாண்டு முதல் அமுல் படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
புத்தாண்டு முதல் அமுல்படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள், குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதன்போது, பிரித்தானியாவில் இருந்து பரவக்கூடிய புதிய வகை கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்மேலும் படிக்க...
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது – ராஜ்நாத் சிங்
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இமாசல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற விழாவில் ஒன்றில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- …
- 137
- மேலும் படிக்க