Main Menu

கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

பிரான்சின் தென்கிழக்கு நகரமான Haute-Savoie இல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

அங்குள்ள jardin d’Europe எனும் பூங்கா ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.

காயமடைந்த ஐவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் நான்கு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் பூங்காவில் இருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிரியா நாட்டைச் சேர்ந்த Abdalmasih H என்பவரே தாக்குதல் நடத்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு பிறந்த அவர் பிரெஞ்சு குடியுரிமை கோரியுள்ள நிலையில் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பகிரவும்...