Main Menu

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலுக்கான அழைப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலின் போது அரசியல் கட்சிகள் எவ்வித அரசியல் பேதமுமின்றி பங்கேற்க வேண்டுமென நினைவேந்தல் குழு அழைப்பு விடுத்துள்ளது.

தியாகி பொன் சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் நினைவேந்தல் குழுவினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

நினைவேந்தலில் அரசியல் பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் பல்கலை மாணவர்களும் நினைவேந்தல் இடத்திற்கு வந்து அஞ்சலியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடியான பொன்.சிவகுமாரன், 1974 ஆம் ஆண்டு பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...