Main Menu

ஜனநாயகம் மறுக்கப்பட்டால் மக்கள் உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் – இரா.சாணக்கியன்

தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கைவைத்தால் மக்கள்  தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி  சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் முன்னெடுத்துவருகின்றார்.

பொதுமக்களின் நன்மைகருதியில்லாமல் அவர் காணி ஏதாவது விற்பனை செய்வதற்கே அவசரமாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு நடவடிக்கைகளைமுன்னெடுத்துவருகின்றார்.

பகிரவும்...