Main Menu

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார்.

இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலையில் முதற்கட்டமாக இலகுரக ஹெலிகொப்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள ஆயிரம் ஹெலிகொப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆலை மூலம் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...