Main Menu

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருச்சபையின் பார்வையை நாங்கள் மாற்றவேண்டும், எங்களுக்கு இனிமேல் தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் உரிமைக்காக வீதிக்கு இறங்கி நீதிக்காக போராடும் கத்தோலிக்கர்களே தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...