இலங்கை தீவாக தனித்து இருப்பதே நன்று – இந்தியாவுடனான பாலம் தேவையற்றது
இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.
எனவே இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதையில் உடன்பாடில்லை என சந்திரசேகர் குறிப்பிட்டார்.
எனினும் இராமர் பாலத்தை சென்று மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பகிரவும்...
