40வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – சரவணபவன் & சித்ரா (07/04/2025)

தாயகத்தில் வேலணை மேற்கை சேர்த்த நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் சரவணபவன்&சித்திரா தம்பதிகள் தமது 40 வது திருமண நாளை 07ம் திகதி சித்திரை மாதம் திங்கட்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் மிக அமைதியாக கொண்டாடுகின்றார்கள்.
இன்று தமது 40வது திருமண நாளை கொண்டாடும் சரவணபவன்-சித்திரா தம்பதிகளை அன்பு பிள்ளைகள் ஆதீசன், நிலானி, அன்பு மருமகள் யசோதா, அன்பு பேரப்பிள்ளைகள் அர்ஜுன், சகாரா, தாயகத்தில் வசிக்கும் அன்பு அக்கா குடும்பம், தங்கை குடும்பம். அண்ணா குடும்பம், பிரான்ஸ் Toulouse நகரில் வசிக்கும் தம்பிமார் குடும்பம், பிரான்சில் வசிக்கும் மச்சான்மார் குடும்பம், அக்கா குடும்பம், அண்ணா குடும்பம், தம்பி குடும்பம், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து, பவன்&சித்திரா தம்பதிகள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் சிரஞ்சிவியாக வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று 40வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் திரு.திருமதி,சரவணபவன்-சித்திரா தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பமும் பல்லாண்டு காலம் சீர் சிறப்புடன் வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம். .தீர்க்க சுமங்கலி பவா .
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் ஆதீசன். நிலானி மற்றும் சகோதரர்கள்.
அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி!