31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர் இராசபூபதி மார்க்கண்டு (01/03/2026)
யாழ் அல்லாரையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, யாழ் அல்லாரை சங்கிலிக்கிணற்றடியில் வசித்து வந்தவருமான அமரர் இராசபூபதி மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இன்று 01ம் திகதி பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர் இராசபூபதி மார்க்கண்டு அம்மாவின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் அன்பு பிள்ளைகள் விபுலராணி, கிருஷ்ணகுமார், செல்வகுமார், குமுதினி, முகுந்தகுமார் அன்பு மருமக்கள் செல்வரத்தினம், தங்கராணி, ரதிமலர், சிவகுமார், அமுதா அன்பு சகோதரங்கள் இராசலக்சுமி, கந்தராசா, செல்வரத்தினம், திலகவதி, வசந்தா தேவி, மீனாம்பிகை, விஜயகுமாரி மற்றும் பாசம்மிகு பேரப்பிள்ளைகள் அபிநவன், ஆதிகா, அஞ்சனா, அபிமன்யு ,அர்ச்சுனா, அனோஜன், அக்ஷயா, பிரியன், ஆரணி, அருணன், சுபோதினி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலியுடன் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் பங்கேற்கின்றார்கள்.
TRTதமிழ் ஒலி குடும்பமும் அன்னாரின் கண்ணீர் அஞ்சலியிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் பங்கு கொள்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் குடும்பத்தினர்.
அவர்களுக்கு எமது நன்றி
