Year: 2019
ஜமால் கஷோக்கி வழக்கில் மோசடி: துருக்கி கடும் விமர்சனம்
உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என துருக்கி விமர்சித்துள்ளது. குறித்த வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சவுதிமேலும் படிக்க...
புர்கினோ பாசோவில் 31 பெண்கள் உட்பட 35 பொதுமக்கள் பயங்கரவாதிகளினால் வெட்டிக்கொலை
புர்கினோ பாசோவின் வடக்கு சூம் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) 31 பெண்கள் பெண்கள் உட்பட 35 பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையினால் மேற்கு ஆபிரிக்க நாட்டில் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக ஜனாதிபதி ரோச் மார்க்மேலும் படிக்க...
கொடநாட்டுக்கு நானே உரிமையாளர் – சசிகலா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திமேலும் படிக்க...
பொதுஜன வாக்கெடுப்பிற்காக பிரார்த்திக்கிறோம் – உறவுகள்
கிறிஸ்மஸ் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டமொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1040 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலே இப்போராட்டம் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. காணாமலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைமேலும் படிக்க...
வாழ்நாளில் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
சக மனிதனுக்கு கவலையும் கஷ்டத்தையும் கொடுக்குமாறு எந்தவொரு ஆகமத்திலும் கூறப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுமாறும் அடிப்படை வாதத்துக்கு இனி வாழ்நாளில் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம்மேலும் படிக்க...
தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம்
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்தமேலும் படிக்க...
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும்மேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் முதல் மனுத் தாக்கல்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் : சஜித்
அரசியல் பழிவாங்கல்களைப் புறந்தள்ளி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான தேவைப்பாடொன்று எழுந்துள்ளது. நாட்டில் நீதி, நேர்மை, அபிவிருத்தி ஆகியவற்றை செயற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதேவேளை அதிகாரத்தை நிலைநிறுத்திக்மேலும் படிக்க...
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், “நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் சங்கிலிய மன்னன் மற்றும் எல்லாள மன்னனின் கேடயங்களைத் தூக்குவோம். மீண்டும் போருக்கு எம்மைமேலும் படிக்க...
யாழில் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.மேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வுகளில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த சிலமேலும் படிக்க...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள்
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாமேலும் படிக்க...
பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு!
பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு,மேலும் படிக்க...
கிறிஸ்மஸ்சையும் பொருட்படுத்தாது தொடரும் போராட்டம்: இருபதாவது நாளாகவும் போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், இருபதாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழப்பு!
பிரித்தானியா – சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது சஸெக்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரவ்லி டவுன் என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்துமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பாலம்பேங் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 13 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவுமேலும் படிக்க...
FATF இன் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்: 150 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு காலக்கெடு
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு 150 கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரான்சின் பரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும், FATF என்ற நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவதைமேலும் படிக்க...
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு கிடைத்த வெற்றி – மம்தா
ஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 217
- மேலும் படிக்க