Main Menu

வாக்குகள் இல்லாததால் பணம் இல்லை என கூறுகின்றது அரசாங்கம் – ஜே.வி.பி

வாக்குகள் இல்லை என்பதனாலேயே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறி மக்களை ஏமாற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை இருந்திருந்தால் எப்படியாவது பணத்தை பெற்றுக்கொண்டு தேர்தலை நடத்தியிருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் தற்போது வாக்குகள் இல்லை என உணர்ந்துள்ள காரணத்தினாலேயே அரசாங்கம் தேர்தலைக் கண்டு அஞ்சுவதாக டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...