Main Menu

வத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வத்தளை, ஹேகித்தைப் பகுதியில் உள்ள பிரபல சுசி ஆடையகத்தில் தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து இன்று காலை 7 மணியவில் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.தீயினால் ஆடையத்தில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பகிரவும்...