Main Menu

முதல் 10 மாதங்களில்16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்குப் பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 601, 949 ஆகும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தின் நிறைவடைந்த 27 நாட்களில் மாத்திரம் 117, 141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பிரித்தானியா, ஜேர்மன், சீனா, ரஷ்யா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தே வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பகிரவும்...