Main Menu

பிரான்ஸில் 380 போராட்டக்காரர்கள் கைது – 38 பேர் காயம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபிரான்ஸில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 14 காவல்துறையினர் உட்பட 38 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...