Main Menu

நியூஸிலந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்காரர் அனைத்து குற்றச் சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்

நியூஸிலந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய ஆடவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

29 வயது பிரெண்டன் டெரண்ட் முன்னர், 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு குற்றச்சாட்டு என அனைத்தையும் மறுத்திருந்தார்.

ஆனால் இப்போது அவர் மனம் மாறி எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

டெரண்டுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து பின்னொரு நாளில் தீர்மானிக்கப்படும்.

COVID-19 கிருமிப் பரவல் காரணமாக நியூஸிலந்து முடக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்கள் வழக்கநிலைக்குத் திரும்பியதும் டெரண்டுக்கான தண்டனையைத் தீர்மானிக்க முடிவுசெய்துள்ளார் நீதிபதி.  

பகிரவும்...