Main Menu

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸாரே, இன்று (திங்கட்கிழமை) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார், அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் இன்று கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...